சனி, 16 ஜனவரி, 2016

Posted by விகாரன் On 6:50 PM
நாம் இருவரும் வேட்டைக்காரர்களாக இருக்கிறோம்
நமக்கிடையில் ஆறிருக்கிறது
மிதமான வேகத்துடன்
நமக்கிடையில் நீண்ட சொல்லாக
ஆறிருக்கிறது.
என்தோ ளில் இருந்த மூட்டையில்
கடல் இருக்கிறது
வார்த்தையாய் உறைய வைக்கப்பட்ட கடலது
ஒரு கடலை வேட்டையாடுவது என்பது எத்துனை
அபாயமானதென்று உனக்கு தெரியும்
இப்போது நான் தடுக்கி வீழ்ந்தால்
இந்த மூட்டை அவிழ்ந்து
கடலாகும்
வேட்டையாடியவுடன்
மிருகங்களை
கொல்வது போல் அதனை கொன்றிருக்க வேண்டும்
உனக்கு கடல் எத்துனை பிரியமானது
நீ கரையில் நிற்கின்றாய் இந்த ஆற்றை வேட்டையாடும் குரூர பார்வை உனக்கிருக்கின்றது
எனதன்பே ஆற்றை விட்டு விடு
இன்றிரவு நாம் கடலை புசிக்கலாம்
முன்பொருநாள்
உன்னுடைய பிரியமான கண்ணீர்துளிகளை நான் வேட்டையாடியதை இன்னும்
நீ மனதிலிருத்தி கொள்கிறாயா?
என்னுடைய பிரார்த்தனை பற்றிய சொற்களை உனக்கு தருகின்றேன்
ஆற்றை விட்டு விடு
இன்னுன் நீ உன்னுடைய பார்வையை தாழ்த்த வில்லை
எனதன்பே
சரி
உன்னுடைய கண்னீர் துளிகளின்
பெயரில் அவற்றை உனக்கு தருகின்றேன்.
கடலுனக்கு இனி
நாம் இன்னும் வேட்டைகாரர்களாகதான் இருக்கின்றோம்.
-ய-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக