திங்கள், 30 நவம்பர், 2015

Posted by விகாரன் On 5:54 AM



The silence depressed ME . its wasn’t the silence of silence.
                              it was my OWN silence.
                                                                                                                                                                                         -  Sylvia plath

01.

ஒரு கனவு. கொஞ்சம் ஞாபகமின்மை காரணமாக புனையப்பட்டதுமாகும். ஒரு பெண் தொடக்கத்தில் ஆடை அணிந்திருந்தாள் ,கறுப்பு நிறமென்று நினைக்கின்றேன் , முதுகில் முள்ளந்தண்டின் இரு புறமும்  இறக்கைகள் இருந்ததற்கான வடுக்களை கண்டேன்.ஒரு வேளை அவை விபத்தொன்றின் காயமாக இருப்பதற்கும் சாத்தியங்கள் உண்டு.
ஒரு பெரிய அளுயர மயில் அவளுடன் இருந்தது , அவளுடன் நடந்தது , உண்டது , இராத்திரியில் அதனை அவள் அணைத்த வாறே உறங்கத்தொடங்கினாள். மெல்ல மெல்ல  அவளின் தோலுடன் மயில் மிக நெருக்கமானது . பச்சை , நீலம் , கறுப்பு நிறங்கள் அவளின் தோலில் படியத்தொடங்கின , குறிப்பாக அவளுடயை மார்புகளில் அதிகமாக மயிலின் கழுத்து இழைவதனால் அதன் கழுத்தில் இருந்து மெல்ல உதிரும் ரோமச்செதில்கள் அவளின் தோலின் நுண் துழைகளுக்குள்  உக்கி உக்கி  நுழைந்து படியத்தொடங்கின , எப்போதும் கோடையில் வியர்க்கும் , குளிரில் நடுங்கும் அவளுடைய தேகம் அதன் பின் குளிர் சூடு இரண்டையும் பிரித்தறிய முடியாதவொன்றாய் மாறியது.
இவ்வாறிருக்க தூக்கம் கலைந்தது.


02.

உன்னை மறக்கும் தறுவாயில் இருக்கிறேன்.நிறைய பெண்களுடன் உரையாடுகின்றேன் , பார்க்கின்றேன், நன்றாகப்பார்க்கின்றேன். உள்ளே ஒரு பக்கத்தில் அவர்களையும் இன்னொரு பக்கத்தில் உன்னையும் நிறுத்திவிட்டு  ஒப்பிட்டு  பார்ப்பது தெரிகிறது. சற்று பருமனான சிவப்பு ராணி வண்ணத்துப்பூச்சியை பிடித்து , அதனை உள்ளங்கையில் வைத்து பர பரவெனக்கசக்கி  சிதறும் அதன் தசை கூழை நுகர்ந்து பார்க்கும் உணர்வினை போல அப்போது அது.

03.

இப்போது என்னையும் உன்னையும் நினைக்க எரிச்சலாக உள்ளது. அடிவயிற்றிலிருந்து நெஞ்சுவரை பரவும் உணர்சி அது. இதை எழுதும் போது பிடரியை வேகமாக சொறிந்து கொண்டே வெப்பம் மிக்க பெருமூச்சொன்றை விடுகின்றேன்.

04.

உன்னுடைய பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்து பார்க்கின்றேன். எவ்வளவு மோசமாகிவிட்டது இந்தக்கணம். வியாதி பிடித்த  கம்பிகளை கொண்ட சுவர்கடிகாரம்  அடிக்கடி பார்வை நிலைத்து நிற்கவும் சேர்த்து விலை கொடுத்து வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.


05.

மீண்டும் எரிச்சலாக இருக்கிறது, இதை எழுத வேண்டும் என்று நானே என்னை கட்டாயப்படுத்தி எழுதிக்கொண்டிருக்கின்றேன். வெளியே சிணுங்கும் மழை , குளிரில் விறைத்து அறைக்குள் நுழையும் கோழியை  புத்தகம் ஒன்றை எடுத்து அதன் மீது எறிந்து துரத்தி விட்டு தொடர்ந்தும் எழுதுகின்றேன்.
இந்த மழை
 இரண்டு மணிநேரங்களுக்கு முன் பஸ் யன்னலுக்கு வெளியே அழகாகதான் இருந்தது. ஒரு கவிதைக்குரிய அழகு அதனிடமிருந்தது. அரைப்பசியில் , தனிமையில் , உன் பெயரில் இப்போது அது எவ்வளவு எரிச்சல் மிக்கதாய் பொழிகிறது.


06. 

இதை நீ படிக்கப்போவதில்லை , அவசியமும் இல்லை , உனக்கு என் தொல்லை பழகிவிட்டது , பொருட்டற்ற ஓர் சதை இருப்பு நான் ., பார்தாயா இப்படித்தான்  நான் இருக்கிறேன் , எப்போது என்னை நியாயப்படுத்த எழுதுகிறேன் , என்னை தூயவனாக , தன்னிகரில்லாதவனாக நிறுவ நான் எழுதுகிறேன் , அதன் அரசியல் அதுதான் , என்னிடம் இப்போது  , காதலில்லை , உன்மேல் பிரியமில்லை 

 ஒருவேளை இந்த எரிச்சல் மிக்க கணத்தை நீ நம்பலாம் , அது தூய்மையானது , உன்மேல் ப்ரியமுண்டென்பதையோ  , வார்த்தைகளில் உள்ள உண்மை மற்றும் உண்மைகள் பற்றியோ நீ சிந்திக்கத் தேவையில்லை ,

ஹாஹா

நல்ல வேளை நீ இதை படிக்கப் போவதில்லை.

சொல்லும் சொல்லிய அனைத்தும் பொய்யாகும் , இங்கே எதுமில்லை ஒருவேளையுன் கருணையுள்ளம் என் பொருட்டு நேசிக்க இந்த எரிச்சல் மிக்க பொழுது உனக்கு உதவும்.

எனக்கு

எதேனும் ஒருத்தி வெள்ளிக்கிழமைகளில் எதிர்ப்படுகையில் வரும் பாண்டீன் ஷம்புவின் மணம்  , உன் உச்சந்தலையின் மிகப்பிரியம் மிக்க நெடியை எனக்கு ஞாகப்படுத்தும் .

எரிச்சலற்ற பிரியம் மிக்க கனவது.


-யதார்த்தன் -

திங்கள், 23 நவம்பர், 2015

Posted by விகாரன் On 3:59 AM





ஆதாம் கடவுளிடம் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை எழுதி முடித்திருந்தான். அன்று காலையில் தன் பிரியமான புள்ளிமான்களில்  தொடைகளில் அதிகம் சதைப்பிடிப்பான, அதிக தூரம் பயணிக்க தகுந்த  தெரிவு செய்து ,அதன் கழுத்தில்  மன்னிப்பு கோரிய கடிதத்தை கட்டி வடக்கு புறமாக அதனை தட்டிவிட்டான். அது செல்வதை  குன்றொன்றின் மீது ஏறி நின்று பார்த்தபடியிருந்தான்.
அப்போது அவனுக்கு பின்னால் கனைப்புச்சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தான். “ம்” கம்பீரமாக நின்றிருந்தது.
”ம்ஒரு பெண் குதிரை , அப்பளுக்கற்ற  வெள்ளைத்தேகம்  , காற்றை வருடிக்கொடுக்கும் நீளமானதும் மிக மென்மையானதுமான பிடரி முடி , சதைப்பிடிப்பான பளபக்கும் அதன் தேகம் , அவள் அடிக்கடி பீழை எடுத்தும் முத்தமிட்டும் விளையாடும் அதனுடைய தீர்க்கமான கண்கள்.  , நிலத்தில் உதைக்கும் போது கடும் தரையையும் தோண்டியெறியும் கால்களும் அதன் குளம்புகளும் , அப்பிடியே “ம்” ஐ பார்த்த படியே  இருக்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.
”ம்” ஐ அவள் மேற்கு பகுதியில் உள்ள புல்வெளியிலிருந்து எடுத்து வந்தாள். “ம்” பிறந்து  சில நொடிகளிலேயே அதனுடைய தாய் இறந்து விட்டதாக சொன்னாள். தன் குழந்தையை நக்கி சுத்தம் செய்யகூட திராணியற்று “ம்”மின் தாய் இறந்து போனது , கர்பத்தின் , தசைக்கூழ் ஈரத்துடன் அதனை தூக்கி வந்தாள் , தன் நாக்கினாலேயே ம் மின் உடலை தூய்மையாக்கினாள் , அன்றிலிருந்து அவர்களின் பிரியம் மிக்க செல்ல பிராணிகளில் ம் ஒன்றானது. ம் வந்த பிறகு  அவள் மானையும் கரடிகளையும்  டோ டோ பறவைகளையும் கொஞ்சுவதை  குறைத்து கொண்டாள் , அவளுக்கு ஏனோ ம் மை அதிகம் பிடித்து போனது , அவனுக்கும் தான்.

இவ்வாறு நினைத்தவாறு

அதனருகே சென்று  தேகத்தை வருடிக்கொடுக்கத்தொடங்கினான் “ம்” க்கு கழுத்து பக்கத்தில் தடவுவது பிடிக்கும் என்று அவள் ஒரு நாள் அவனிடம் சொல்லிருக்கிறாள் , அன்றிலிருந்து அதன் கழுத்தில் தடவிக்கொடுக்க தொடங்கினான் ஆதாம். கழுத்தை தடவிக்கொடுக்கும் போது “ம்” தனது தலையை ஆதாமின் இறுகிய தோள்கள் மீது சாய்த்துவிட்டு மெல்ல கனைத்தவாறே கண்களை மூடிக்கொள்ளும். தடவும் போது அதன் உடலில் பரவும்  சிலிர்ப்பை ஆதாம் கொஞ்சநாளில் கண்டு பிடித்திருந்தான். அன்றும் அப்படித்தான் அதன் கழுத்துபக்கமாய் தடவும் போது ஏதோ ஒன்று  அவன் கைகளில் உரசியது , பரிசோதித்தான்  அது ஒரு நகக்காயம் , கழுதைப்புலியினுடையதாய் இருக்கும் , அந்த பகுதியில் கழுதைப்புலிகளை அவன் அடிக்கடி கண்டிருக்கிறான். எங்காவது குன்றுகளில் இருந்து “ம்” மின் மீது இருந்து கழுதைபுலி பாய்ந்திருக்க வேண்டும்.

அந்த சம்பவத்திற்கு பின்னர் எல்லாம் குழம்பிப்போனது ,  தேவனின் திருவாயிலிருந்து அக்கினியாய் வந்த சொற்கள் மீண்டும் மீண்டும் அவனுக்கு நினைவில் வந்தன , புனித தோட்டத்தில் இருந்து வெளியேற்றும் முதல் தேவன் சொன்ன வார்த்தைகளவை, அதில் ஒன்று மட்டும் அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வந்தது
“மரணம்”
அப்போது  மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் , விருட்ச சாதிகளுக்கு மட்டும் இருந்த மரணம் , மனுஷ மனுஷிக்கும் வழங்கப்பட்டது.  எல்லாம் இடம் மாறின , மரணத்தை போலவே புதிய பல சொற்கள் பிறந்தன.

பசி
தாகம்
வேட்டை
பகை
முத்தம்
கண்ணீர்
சோகம்
முத்தம்
காதல்

இப்படியாக சொற்கள் பெருகிக்கொண்டே சென்றன ,
அதுவரை பசி என்பது  மனுஷ மனுசிக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்த்து  , பறவை மிருகங்களுக்கு  பசி கொடுக்க பட்டிருக்கவில்லை , மாறாக அவைகளுக்கு  புணரவும் இனம் பெருகவும் தெரிந்திருந்தது. ஆனால் அன்றைக்கு பிறகு எல்லாம்  குலைந்து போனது , எல்லோருக்கும் பசித்தது எல்லோருக்கும் தாகமெடுத்தது , எல்லோரும் புணர்ந்தனர் . விலங்குகள்தாவரங்களை புசிக்க பழகிக்கொண்டன ,வேறு சில  வேட்டையாடி உண்ண தொடங்கின , எப்படியோ அவை சுனை நீரைப்போல இரத்தமும் சுவையானது என்று அறிந்து கொண்டன , ஒரு வேளை அந்த பாம்பு தான்  அவற்றிகு அதனை காட்டியிருக்க வேண்டும் என்று ஆதாம் நினைத்தான்.

இவை எல்லாம் மீண்டும் மீண்டும் அவனுக்கு வேதனையை தந்தன , ஆதாம் குற்ற உணர்வுடன் இருந்தான் , அதைவிட அவளின் பிரிவு அவனை வாட்டி எடுத்தது , நூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது அவள் அவனுடன் பேசி. இருவரையும் இணைக்கும் ஒரே விடயமாக “ம் ” மட்டுமேயிருந்த்து. பகல் வேளைகளில் ம் ஆதாமுடன் இருக்கும் , ஆதாம் அதன் மீதேறி வலம் வருவான் , உணவு தேடி உண்டது போக  மழைக்காலத்துக்காக சேமித்தல் , பயிரிடல் போன்றவற்றை அவன் அறிந்திருந்தான் , அவள் கடற்கரையில் குடியிருந்தாள் , இரவில் ம் அவளுடன் தங்கும் , அவள் உணவு தேடுவதில்லை  அவள்  பறவைகளுடன் நெருக்கமானவள் , அவை அவளுக்க்காக அப்பிள் தவி ர அனைத்து பழங்களையும் தானியங்களையும் எடுத்துவந்தன.
அவள் நாள் முழுவதும் கடற்கரையில் உலவுவாள்  இலைகளை ஆய்ந்து பதனிட்டு  ஆடைகள் தைப்பாள் , இரவில் மின் மினிகளை அழைத்து அவள் குகைவாசலில் மொய்கச்செய்வாள் , அதன் வெளிச்சத்தில் ம் மின் மீது ஏறி கடல்கரையெங்கும் சவாரி செய்வாள் , இப்படியாக அவள் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தாள் . இவற்றை யெல்லாம் ஆதாம் ஏதாவது ஒரு மரத்தில் மறைந்திருந்து பார்ப்பான் . அவள் அருகில் செல்ல அவன் அச்சமுற்றிருந்தான் ,
அன்றைய சம்பவத்திற்கு பிறகு  அவள் அவனிடம் பேசவில்லை , ஆனால் அவனுக்கு தெரியும் , ஆதாமின் அந்த வார்த்தைகள் அவள் மனதில் இன்னும் இரத்தக்கசிவை ஏற்படுத்திய படிதான் இருக்கும் என்று அவன் அறிவான்.

”தேவ  என்னுடன் இருக்கும் படி நீர் அறிவித்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்கு கொடுத்தாள் நான் புசித்தேன் ”
(ஆதியாகமம் – 3.13 )
தேவனிடம்  நடுங்கிய படி அவன் அந்த வார்த்தைகளை சொன்னது அவள் கதறி அழுத்தொடங்கினாள் , தேவன் சபித்து விட்டு போன பிறகும் அவள் அழுகை நிற்கவில்லை , ஆதி மனுஷியின் முதல் அழுகை ஆதாமை குறுகிப்போகச்செய்தது. தேவன் அவள் மேல் இட்ட சாபம் எதுவும் அவளை வஞ்சிக்கவேயில்லை , வஞ்சித்தவையெல்லாம் ஆதாமின் வார்த்தைகள் மட்டுமே.

ஏடனுக்கு வெளியே அந்த கடற்கரையில் ” ம் ” மை கட்டியணைத்தவாறு பலமாதங்கள் அழுதபடியிருந்தாள் , ஆதாம் அவளை நெருங்கும் போதெல்லாம் அவளுடைய வீறுடுகை அதிகமானது , ஒரு நாள் வீறுடுகையை பொருட்படுத்தாமல் அவளை தேற்ற அருகில் சென்றான். அவன் அருகில் வருவதை உணந்தவள் அருகில் இருந்த பாறையில் தன் தலையை முழுவேகத்தில் மோதினாள் . நெற்றிபிளந்து கொள்ளா சூடான குருதி  ஆதாம் நெஞ்சின் மீது தெறித்தது. இரண்டாம் முறை  அவள் தன் தலையை மோத போக சடாரென மாறைக்கும் அவளுக்கும் இடையே பாய்ந்தது “ம்”  . அதனுடைய வயிற்லில் அவளுடைய  தலை மோதியது , செங்குருதி அதன் வெள்ளை வயிற்றினை நனைத்தது , ஆதாம் நடுங்கி விட்டான் , பைத்தியம் பிடித்தவனைப்போல ஓடி வந்து விட்டான் , அதன் பிறகு அவன் அவள் கண்ணில் படுவதேயில்லை. மறைந்திருந்து பார்ப்பதோடு சரி.
ஆதாம் ம் மிடம் ஒவ்வொரு இராத்திரியும் சொல்லி அழுவான் , குரலற்ற அது அவனை மென்மையாய் தன் தாடையை வைத்து தடவிக்கொடுக்கும் , அவளிடம் போய் சொல் என்று அவன் அழாத இரவுகள் குறைவாகவே இருந்தன, கடவுளுக்கு அனுப்பியதை போல பல ஆயிரம் கடிதங்களை  ம் இன் கழுத்தில் கட்டி ,அனுப்பிவிட்டான் , அவள் கடிதத்தை படிப்பதேயில்லை , பெரும் இலைகளில் எழுதப்பட்ட கடிதச்சருகுகள் அவளுடைய  குகையை சுற்றி அடைந்து கிடப்பதை அவன் மறைந்திருந்து பார்த்திருக்கிறான்.

அன்றும் அவளுக்காக ஒரு கடிதத்தை  எழுதிக்கொண்டிருந்தான் , அப்போது காட்டின் நடுவே   ம் மின் அவலக்குரல் ஒன்று எழுந்தது , மிகப்பெரிதாக அந்த அவலக்குரல் கேட்டது அவன் பதறிக்கொண்டு ஓடினான் , காட்டின் நடுவே உள்ள புல்வெளியில் இருந்துதான் ம் இன் அவலக்குரல் எழுந்திருக்க வேண்டும் , அவன் புல்வெளிக்கு வந்து சேரும் போது அவளும் ஓடி வந்திருந்தாள் . ம் தரையில் கிடந்து பெரிதாக  வீறிட்டு கனைத்தபடி கிடந்தது. அதன் யொனி பகுதியில்  சிறிய தலையொன்று வெளிப்பட்டு கொண்டிருந்தது. அப்போதுதான் ஆதாம் இத்தனை நாள் ம் வயிற்றில் ஒரு சிசுவை கொண்டிருந்ததை அறிந்தான். அவன் செய்வது அறியாது திகைத்து நிற்க அவள் பர பரவென காரியத்தில் இறங்கினாள் மெல்ல ம் மின் யொனிப்  பகுதியில் வெளிப்படும் அதன் சிசுவை உருவி எடுக்கத்தொடங்கினாள் , ம் பெரிதாக வீறிட்டது . கால்களை உதைத்து கதறியது  தலையை நிலத்தில் அடித்துக்கொள்ள தொடங்கியது , அவன் தலையை ஆதரவாக பிடித்து அதன் கழுத்தில் தடவிக்கொடுக்க தொடன்ங்கினான் , அத்தனை வேதனையிலும்  ஒரு கணம் அதன் உடலில் தடவலின் சிலிர்ப்பு ஊடுருவதனை இருவரும் உணார்ந்தனர், அவள் ஒருமுறை அவனை நிமிர்ந்து பார்த்தாள் , அவன்கண்களும் அவள் பார்வையை சந்தித்தது. அப்போது ம் பெரிதாக வீறிட்டு தன் சிசுவை வெளியேற்றியது ,
அதன் சிசுவை அவள் கைகளில் துக்கிக்கொள்ள  அதன் முகம் மெல்ல மெல்ல சோர்ந்து போனது கண்கள் சொருகத்தொடங்கின , ஆதாம் பதறிப்போய் அதன் தலையைல் தடவி  ம் ம்ம் ம்ம் என்று அரட்டி பார்த்தான். ம் பூரணாமாய் இறந்திருந்தது.



 அவள் அருகில் வந்து ம் இன் தலையை தன் மடிக்கு மாற்றினாள் , ம் இன் சிசுவை அவன் வாங்கிக்கொண்டான் , அவள் அழத்தொடங்கினாள் , மெல்ல மெல்ல அவள் அழுகை தொடங்கியது . அவன் ம்மின் சிசுவின் மீதிருந்த ஈரத்தை நக்க தொடங்கினான் . அவள் அவனை அந்த சிசுவுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள் , அந்த சிசு அவனுடைய கைகளில் இருந்து நழுவி தன் தாயின் மடியை நோக்கி தவழத்தொடங்கியது அவள் மீண்டும் அழத்தொடங்கினாள் , இம்முறை மிகப்பெரிதாக இறந்து போன ம் மின் மடியை நோக்கி நகரும் அதன் சிசுவை பார்த்து அவள் அழுதுகொண்டிருந்தாள் அவன் மீது இன்னும் நெருக்கமாய் சாய்ந்து கொண்டாள் ஒரு நூறு வருஷத்தின் பின்னரான அந்த அணைப்பை இருவரின் உடல் சூடும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன. 

,அவன் இன்னும் அணைப்பை அதிகமாக்கினான் , 
அவள் ம் இறந்து கிடக்கும் ம் மையும் அதன் மடியை மோதும் சிசுவையும் வெறித்துப்பார்த்தபடியிருந்தாள் . வயிற்றின் அடியிலும் விக்கி அழும் தொண்டைக்குள்ளும் ஏதோ கனத்து கிடந்ததை உணர்ந்தாள் , கண்ணீரை அவள் கண்கள் இன்னும் இன்னும் உகுந்தன , கண்ணீரில் பார்வை லேசாய் மங்க ம் மின் பெரிய வெள்ளை உடல் அவள் கண்களுக்குள் மறைந்தது , இமைகள் இழுத்து சாத்தி கண்ணீரை பிழிந்து விட்டன,
மெல்ல

தேவனுடைய மற்றைய இறுதி வார்த்தைகள்  அவளின் காதுக்குள் ஒலிப்பதை உணர்ந்தாள்

“நீ கர்ப்பவதியாய் இருக்கும் போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன் , வேதனையோடே பிள்ளை பெறுவாய் , உன் ஆசை உன் புருஷனை பற்றியிருக்கும் , அவன் உன்னை ஆண்டுகொள்வான்”
-ஆதியாகமம் -3.16

 -யதார்த்தன் -

ஞாயிறு, 22 நவம்பர், 2015

Posted by விகாரன் On 9:10 PM

சமீப நாட்களாக விமர்சனம் என்ற சொல்லின் மீது அதன் பிரயோகத்தில் 

இருக்கும் அதிகார தொரணை பற்றியும் உடன்பாடற்ற தன்மை என்னிடம் 

இருக்கிறது. தன்னுடைய முழுமையை  ஒட்டுமொத்தமாக்கி  ஒரு பிரதியை 

ஆக்குபவனின்மீது அது பிழை இது சரி என்று வாளெடுத்து வெட்டுவது எந்தளவு

 சரியான செயல் என்பது என்னுடைய கேள்வி.

-சேனனின் லண்டன்காரருக்கு எழுதிய அபிப்பிராயத்தில் -





நான் போரினை உணரத்தொடங்கும் போது போர் முடியத்தொடங்கி விட்டது. துப்பாக்கிகளும்  பீரங்கிகளும்  கிபிர் சத்தமும் உறுமி கேட்ட செவிப்பறைகளை கொண்ட இறுதித்தலை முறையாக நாங்கள் நிற்கின்றோம். தோற்ற தரப்புகளும் வென்ற தரப்பும் எஞ்சிய தர்ம அதர்மங்களை பங்கு போட்டு இன்னும் முடியவில்லை. ஒட்டு மொத்த மானுட இருப்பையும்  போர்கள் மாற்றியமைத்தன . ஈழம் அதற்கு விதி விலக்கல்ல.
ஈழம் தோற்ற தரப்பிற்கும் வென்ற தரப்புக்கும் இடையே முப்பது வருடங்களாக மாற்றப்படாத அதே முகங்களுடன்  இன்னும் பொலிவிழந்து கிடக்கின்றது.  கொள்ளைகள் கற்பிதங்கள் எல்லாம் மேற்புல் மேயும் நம்பிக்கையீனம் கொண்ட  மிருகங்களாகவே நிற்கின்றன. போராடியவர்களில்  ஒரு தரப்பு உடல் உளம் இரண்டும்  விதம் விதமாய் சிதைக்கப்பட்டு போர் மிருகத்தின் பல்லிடுக்குகளில் இருந்து நழுவி வீழ்ந்து கிடக்கின்றார்கள். யாரும் கடந்த காலத்தை ஞாபப்படுத்த தயாராக இல்லை , மறக்கவும் தான்.
தோற்று போனவர்களின் பிணங்களை வாசனை திரவியமிட்டு அரசியல் நடக்கின்றது . பிணங்களின் உள்ளே  தேசத்தின்  குற்றங்களும்  காழ்புகளும்   , தர்மமும் , அதர்மமும் , அறமும்  , கொண்டாட்டமும்  சீழ் பூசிக்கிடக்கின்றன.  விட்ட பிழைகளையும்  தீர்வுகளையும் உயிருள்ள வெற்று மூளைகளுள் தேடுகின்றது மனிதம் . இன்னும் அவை கடந்த காலத்தின் இடைவெளியில் நசுங்கி கிடப்பதை ஒரு சிலரே உணர்கின்றனர்.
போருக்கு பிந்திய இலக்கியங்கள் இன்று மெல்ல மெல்ல நம் பிணங்களை பிரேத பரிசோதனை செய்ய ஆரம்பித்து விட்டன. ஆறிப்போன வடுக்களுக்கு பின்னால்  இன்னும் கட்டிபோய் கிடக்கும் சீழ்குப்பிகளை மெல்லம்மெல்ல உடைத்து பேனாக்கள் எழுத தொடங்குகின்றன. இவ்விடத்தில் தான் சயந்தனின் ஆறாவடுவும் நிற்கின்றது.
விடுதலை போராட்டத்தின் நேரடி சாட்சிகளில் பலதும் ஊமையாகி விட்டன. ஏனையவை தமக்கென தரப்புகளை தெரிவுசெய்து கொண்டிருக்கின்றன. போர்கால மற்றும் போருக்கு பிந்திய இலக்கியங்களில் பெரும்பாலானவை தரப்புகளை  உன்னதமாக்கும் நுண்ணரசியலையே பேசுகின்றன, தனிமனித அறவுணர்வும் நேர்மையும் சோரம் போன இலக்கியங்களை சகட்டு மேனிக்கு கொண்டாடி தள்ளுகின்றது நம் சமூகம். ஆனால் அடிப்படை  மனிதத்துவம் வாய்க்கப்பட்ட படைப்பாளிகள்  மேற் சொன்ன மாசுக்களை நீக்கி விட்டு மேலெழுகின்றனர். சயந்தனை நான் இவ்வகையாறாக்குள் நிறுத்துகின்றேன்

சயந்தன்

ஆறாவடு பற்றி  கதைக்க முதல் அண்மையில் வாசித்த இரண்டு போருக்கு பின்னரான இலக்கியங்களை நான் இங்கு குறிப்பிட வேண்டும் ஒன்று  தமிழ்கவி யின் “ஊழிக்காலம் ” இன்னொன்று சாத்திரியின் ஆயுத எழுத்து . என்னை பொறுத்த வரை அடிப்படை மனித அறம் , நல்ல இலக்கிய பரிச்சயமற்ற நபர்களால் எழுதப்பட்டவை இவை இரண்டும் . இரண்டும் செய்வது மேலே சொன்ன பிண அரசியலை தான். தமிழ்கவியின் குழப்பம் மிக்க தரப்பு தொடர்பான நிலையும் , சாத்திரியின் வீரசாகச மனநிலையும் மட்டும் எஞ்சும் படைப்புக்கள் இவ்விரண்டும். ஒரு வேளை இனிவரும் காலங்களில் சாத்திரியும் , தமிழ்கவியும் இதனை கலை நிலைப்பாட்டுடன் வேறுவகையில் பிரதியாக்கம் செய்ய முற்படலாம்.




















                  இதை நான் இங்கே சுட்டிகாட்ட காரணம்  ஊழிக்காலமும் , ஆயுத எழுத்தும்  சயந்தனின் ஆறாவடுவிற்கு பிற்பட்டவை. அண்மையில் சயந்தனை சந்தித்த போது
“நாவல் எழுதி  மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது  அதன் கருத்தியல் சார் நிலைப்பாடுகளில் நான் இன்னும் மாற்றமடைந்து விட்டேன் ” 

என்றார். நாவலை வாசித்து முடித்ததும் எனக்கும் அவர் சொன்னது சரி என்றே பட்டது.

நான் ஆறாவடு நாவலை இரண்டு நிலைப்பாடுகளில் வைத்து பார்க்க முற்படுகின்றேன்.


01. நாவலின்  எடுத்துரைப்பு முறை
02. நாவலின் நுண்ணரசியல்

01 

நாவலின் எடுத்துரைப்பு முறை சமீபத்திய ஈழத்து நாவல் வளர்ச்சியில்  முன் நிற்கின்றது என்று சொல்லலாம் .ஆனால் கதை சொல்லியின் அமைப்பு சார் நிலைபாட்டில் இன்னு  நுணுக்கம் தேவைப்படுகின்றது. பெயர்கள் மூலம் முடிச்சுக்களை அவிழ்த்து செல்ல முற்படுகின்றார் சயந்தன்  , ஷோபாசக்தியின் கதை சொல்லும் பாணியை இடைக்கிட தொட முற்படுகின்றார். லீனியர் வகை எழுத்திற்கும் நொன் லீனியர் வகை எழுத்திற்கும் இடையில் நகர்கின்றது நாவல் . யாழ்ப்பாண மக்களின் பிரத்தியேக  காலப்பின்னணியில் அமைந்த மொழிநடையை சயந்தன் நன்கு உள்வாங்குகின்றார். போராளிகளுக்கும் –மக்களுக்கும்-காலத்துக்கும்  இடைவெளி கொடுக்கும் இடங்களில் சயந்தனின் சொல்லாட்சிகள் நின்று வேலைசெய்கின்றன. நான் படித்த அளவில் ஷோபாவிற்கு பிறகு சயந்தனிற்கு யாழ்பாண மொழி இயல்பாய் வருகின்றது.

கதை சொல்லும் போது இடையறும் இடங்களில்  அங்காங்கே சில இடங்களில் நொன்லீனியர் தன்மை குழப்பங்களை ஏற்படுத்துகின்றது ,சாதாரண வாசகன் அவ்விடங்களில் புத்தகத்தை பிறகு படிக்கலாம் என்று மூடிவைத்து விட்டு போகக்கூடும்.


02

 அடுத்து நாவலில் பேசு பொருளில் நுண்ணரசியலை அவதானிக்க வேண்டும்  தமிழ்கவியின் சந்தர்ப்பவாத புலி எதிர்ப்பு குழப்பமோ , சாத்திரியின் பழைய புலி சாகசமோ இங்கே பேசப்படாதது  இந்நாவல் எனக்கு தந்த மிகப்பெரும் மனத்திருப்தி.

சயந்தன்  தரப்பொன்றில் நிற்பதை விரும்பவில்லை கடந்த காலத்தை  மனிதத்துவத்தின் மீது நின்று பார்கின்றார் . தவறுதலாக குற்றம்  செய்து விட்ட ஒரு குழந்தையின் வீறுடுகை நாவலெங்கும் இடைக்கிட எழுகின்றது . சம்பவங்களை சொல்லி முடிக்கும் போதெல்லாம் சொல்லிய சம்பவங்களில்  மேலெழும் அதர்மங்களுக்கும் , குற்றங்களுக்கும்  மேலே தன் குற்ற உணர்வை ஊற்றி  அவற்றை மூடிவிடப்பார்க்கிறார்.சயந்தனின் கதாநாயகன் மீது  காலம் திணித்ததையும் சரி  அவனே எடுத்து கொண்டவையையும் சரி  ஒரே  தளத்தில் நிறுத்துவது நெருடுகின்றது.

முன்னுரையில்
“பதுங்கு குழியற்றவாழ்வினை பாரதம் தந்துவிடுமென  அவர்கள் எதிர் பார்த்திருந்தார்கள்  முடிவில் நம்பிக்கைகள் சிதைந்தழிந்தன ,சனங்களின் முகங்களில் போர் அமிலமாய் தெறித்தது  ”
ஆனால் இங்கே மக்களின் கருத்து நிலை குழப்பமான ஒன்றாகவே நிலைகின்றது. தலைமைகளும் காலமும் சிதைத்த போராளி ஒருவன் ஆற்றாமையின் முடிவில் குற்ற உணர்வின் மூலமாக ஞானமடைய துடிக்கிறான். அவனுடைய முடிவே அவனுடைய ஞானம் என்கின்றார் ஆசிரியர்.

கடைசி அத்தியாயம் அமைப்பு ரீதில் நன்றாக இருந்தது. அதேபோல் காலபெருவெளியில் கரைந்து போகும்  ஒட்டுமொத்தத்தின் வடிவமாய் அதனை செய்திருக்கிறார் சயந்தன் . போர்காலம் பற்றிஎழுதப்படும் அத்தனை நாவலுக்கும் அந்த அத்தியாயத்தின் கருத்து நிலையை பொருத்தி விடலாம் .
சயந்தனின் ஆறாவடு என்பது புறக்காயம் மட்டும் ஆறிய, அடிக்கடி தோண்டி தோண்டி குருதி  ஒழுகும்  மனித குற்ற உணர்வினதும் தீர்வற்ற முடிவிலியாகிவிட்டவாழ்வினதும் கூக்குரலின் பிரதியாக்கம்.

-யதார்த்தன் –


ஞாயிறு, 15 நவம்பர், 2015

Posted by விகாரன் On 6:17 AM

அசுரவிதை 


அவன் மனசு எப்பிடி வலிச்சிருக்கும்
நான் அப்பிடி சொல்லி இருக்க கூடாதோ ?
வேற வழி இல்லையே.
அவனுக்கு கொடுத்த தண்டனை கொஞ்சம் பெரிது தானோ
பொறுமை காத்திருக்க வேண்டும்.
மனசு அலைபாய்ந்தது .எதோ ஒரு ஓரத்தில் குற்ற உணர்வும் யதார்தமும் கட்டிப்புரண்டு சண்டை போட்டன. கண்டிப்பாய் அவனை வெறுப்பது மட்டும் சாத்திய படுவதாய் இல்லை.


அவன் முகம் மனதில் எழுந்தது ,சிரித்தான். பேசினான் ...வழமைபோல கவிதையாய். தான் என்ன எதிர்பார்தாளோ அவை எல்லாம் பேசினான் . குரலில் ஆண் என்னும் அகங்காரம் இல்லை அடிமை உணர்வும் இல்லை. சில சமயம் சிந்திப்பாள் எப்படி முடிகிறது இவனால் ஒரு பெண்பிள்ளையை அதுவும் 2 வயது அதிகமான பெண்பிள்ளையை கனகச்ச்சித மாய் புரிந்து கொண்டு பேச.
பாராட்டுவான் .


“நல்லா இருக்குடி இந்த உடுப்பு...”
அதனூடே நகைச்சுவைப்பான்
‘’கடைக்காரன் பாக்கதப்போ எடுதிட்டியா ...?’’
விவாதிப்பான்
”இல்லை அப்படிச்சொல்லாதே ஆண்களும் மோசமாவர்கள் தான்......நீ பெண்ணா இருந்து உன் வர்க்கத்தை பிழையாய் கதைக்காதே”
நலம் விசாரிப்பான்
”பனடோல்போட்டியா ? இண்டைக்கு கிளாஸ் போகாதே நான் நோட்ஸ் வாங்கிதாறன்”
கவைதையால் கதைப்பான்
கவிதைஒண்டு சொல்லேண்டா
“கம்பன் மகளே கவிதை கவிதை கேக்கிறாள் நான் பாக்ய வான் தான் ”
என்பான்.
இப்படி ஏராளமாய். நூலகசந்திப்பில் அறிமுகமானது முதல் அவன் நல்ல தோழனாக, இருந்தான் இன்றும் அப்படித்தான் என நினைக்கிறேன்.
ஆயினும் காலத்திற்கு பொறுக்கவில்லை அவனுடனான என் பழக்கம்.அவன் மனதில் ஏன் விதைத்தது அந்த அசுரச்விதையை. நெஞ்சில் இன்னும் இருகிறது நேற்றைய உரையாடல் அட்சரம் பிரக்காமல்.
“ஏய் காதல் .இத பத்தி என்ன நினைக்கிறாய் ?
ஏண்டா கேக்கிறாய் ?
சும்மா தாண்டி கேட்டேன் .சொல்லு யாரயாச்சும் லவ் பண்ணி இருக்கியா ?
என்ன நக்கலா ? அப்பிடி ஒண்டும் இல்லை
சும்மா நடிக்காதே !! ஒருத்தனுமா உன் பின்னால சுத்தல ?
இல்லை !
ஐ....எனக்கு தெரியாதா !! சுமாராக இருந்தாலே சுத்துவானுக !! நீ சூப்பர் பிக.....!!!!
சட்டேன நிறுத்தி கொண்டு நாக்கை கடித்து கொண்டு முறுவலித்தான்.
என்னடா !! பேச்சு ஒரு மாதிரி இருக்கு !! (எனக்கு பிடித்திருந்தது என்னை சூப்பர் வகைக்குள் அடக்கியது ஆனாலும் காட்டி கொள்ளவில்லை)
சாரிப்பா !!அத விடு யாருமா உன்கிட்ட புரப்போஸ் பண்ணினதில்லை ?
இல்லைடா!!!
போ நீ பொய் சொல்லுற !! இனி உன் கூட என்ன பேச்சு நான் உன் கிட்ட உண்மையாதானே இருக்கேன்..இன்னிக்கு எத்தின பொண்ண சைட் அடிச்சன்னு கூட சொல்லுறன் ஆனா நீ போய்யா பேசுற பொய்காரி .போ கோவம் !!
எனக்கு தெரியும் அவன் கோபம் ஒரு அஞ்சு நிமிசம் கூட தாங்காதுன்னு .ஆனாலும் அவன் சொல்வதில் உண்மை இருந்தது.
“ம்ம்..சரிசரி .....ஒருத்தன் கேட்டான் டா !!!
யாரு ?
கொபிநாத் த தெரியுமா?
யார் போன மாசம் அவுஸ்டேலியாக்கு கடலால போனானே அவனா ?
ம்ம்ம்..அவன் தான்.
நீ என்ன பதில் சொன்ன ?
அப்ப படிகிற டைம்டா .அத பத்தி யார் நினைச்சா . முடியாதுன்னு சொல்லிடன்.
ம்ம்ம்ம்.....அப்ப நீ யாரையும் லவ் பண்ணல !!
சத்தியமா இல்லை டா .
ம்ம்ம்ம்ம்...
கொஞ்சநேரம் மவுனம்.நான் படிச்சு கொண்டிருந்த புத்தகத்தினுள் மூழ்க தொடங்கினேன்.
அவன் குரல் கலைத்தது.
“நீ ஏன் இரண்டு வருசஷம் முன்னாடி பிறந்தடி ?
ஹா ஹா !! என்னடா இது கேள்வி ? ஏன் இப்பிடி கேக்கிற ?
ஏதோ தோணிச்சு !!
ஏன் அப்பிடி தோணிச்சு ? 2 வருசம் பிந்தி பிறந்தா இந்த வருஷம் உன் கூட சேர்ந்து ஏஎல். எக்ஜாம் எடுத்திருப்பனா ? ஹ்ஹாஹா...(சத்தியமாக அவன் கேள்வியை ஏதோபகிடின்னு நினைச்சு தான் சிரிச்சேன் )
இல்லைடி 2 வருஷம் பிந்தி பிறந்து இருந்தா நானே உன்னை காதலிச்சு இருப்பேன்ல ...!!
(எனக்கு அவன் வழமை போலவே பகிடி விடுறான் என்று தான் தோன்றியது )
ஹா ஹா ஆமாடா இப்பவே உன் இம்சை தாங்கல இதுல உன்னை லவ்வ்வு வேற. சிரித்தேன் .
அவன் முகம் கறுத்தது இருந்ததை விட அதிகம் கறுத்தது .
எனக்க்கு அப்போதுதான் உறைத்தது
“டேய் சீரியசா எடுத்துகிட்டியா !! சும்மா டா சொன்னேன் “
அவன் பேச வில்லை மவுனமா வே இருந்தான் .அவன் தோளை பிடிச்சு உலுப்பினேன் .டேய் சும்மாடா தம்பி !!!
அவன் சொன்னான்
அப்பிடி கூப்பிடாதே இனி!
ஏண்டா ? தம்பி தானே நீ ?
இல்லை அப்பிடி கூப்ப்பிடாதே !!
ஏன் டா ?(இன்னும் அவன் தோளில் இருந்த கைஎடுக்கவில்லை )
ஏன்னா நான் உன்னை விரும்புறன்
தூக்கி வாரிப்போட்டது எனக்கு .சட்டன அவன் தோளை பிடித்திருந்த கை நெருப்புச்சுட்ட வேகத்தில் விலகிற்று.
சட்டென்று என்கண்கள் சிவந்தன .என் வழமையான முன் கோவம் என்னை அசுர வேகத்தில் ஆட்கொண்டது.( என்னிடம் அதுதான் அவனுக்கு பிடித்ததுன்னு முதல் ஒருதரம் அவன் சொன்னதாய் ஞாபகம் )
டேய் நான் உன்னை என்ர தம்பி ந்னு தான் நினைச்ச்சு பழ்கின்னான் ஆனா நீ இவ்வளவு .கேவலமான நினைப்போட என்னோட பழகுவன்னு நினைக்கல. இனி என்னோட கதைக்காதே .
எண்டு சொல்லிட்டு வந்திட்டேன்.
கடைசியாய் அவன் முகத்தை பார்த்த போது கண்கள் சிவந்து கிடந்தன. கண்ணீர் கிரகப்பிரவேசத்துக்கு தயாராக இருந்தது.ஆயினும் எனக்கு கோபமே வந்தது . திட்டி தீர்த்தேன் .என்கண்களும் கலங்கி விட்டது.வேகமாய் வந்து விட்டேன்.
2 வாரங்கள் . கழிந்தன அவனை காணும் சாத்திய பாடுள்ள இடங்களுக்க்கு போவதை தவிர்த்தேன். கோவம் அடங்கி விட்டது.அறிவுக்கு புலன்கள் அனுமதி கொடுத்தன. யோசித்தேன்.பாவமாய் இருந்தது.அவன் சொன்ன அந்த “விரும்புறன் வார்த்தை” தவிர அவனை வெறுக்க எனக்கு ஒரு காரணம் கூட கிடைக்கவில்லை.அந்த அளவிற்கு அவனுக்கு நல்ல இடத்தில் சிம்மாசனம் போட்டு வைத்திருந்தது மனது.
ஒரு முடிவுடன் கிளம்பினேன். அவனுக்கு புரிய வைக்கலாம்.சமாதானம் சொல்லலாம். பண்பாடு ,சமூகம் என்று எனக்க்கு நிறையச்சோல்லி தரும் அளவிற்க்கு அவன் அறிவாளி.அவன் சொன்னவற்றையே அவனுக்கு உதாரணமாய் சொல்லலாம் . புரிந்து கொள்வான்.அவன் புத்திசாலி.
அவன் வீடு
அன்ரி வந்தா (அவன் அம்மா)
“தம்பி சொன்னவன்”
என்ன அன்ரி ?
..கொம்பியூட்டர்ல ஏதோ டொக்கிமென்ஸ் இருக்கு நீ எடுக்க வருவன்னு.
அவன் எங்க அன்ரி போட்டான் ?
அன்ரி ஆச்சரியமா பார்த்தா
ஏன்ண்டி பிள்ள தெரியாத மாதிரி கேகிற அவன் கொழும்புக்கு கோஸ் படிக்க போனது உனக்கு தெரியாதோ ?
எனக்கு தூக்கி வாரிப்போட்டது
எப்ப அன்ரி ?
போன கிழமை.ஏன் இரண்டு பேரும் சண்டையோ ? என்று கேட்டுக் கொண்டிருந்த அன்ரி வாசலில் யாரோ வர
சரி நீ அவன்ர அறைக்குள்ள போய் கொம்பிய்ய்ட்டர பார்.\
என்று சொல்லிவிட்டு நகர்ந்தா எனக்கு புரிந்தது.கொம்பூட்டர்ல ஏதோ இருக்கு.
போனேன் அதை திறந்தேன் திரையில் ஒரு கோப்பு பாஸ்வேட் போட்டு இருந்தது . அதில் என் பெயர் .
கிளிக் செய்தேன் பாஸ்வேட் கேட்டது.எனக்கு தெரியும் அவன் எப்பொது ஒரே ஒரு ஒரு பாஸ் வேட்தான் பாவிப்பான். “யவனராணி” அவனுக்க்கு விருப்பமான நாவல். எனக்கு (எனக்கு மட்டும் தான் அவன் பாஸ்வேட் தெரியும் ந்னு கர்வமாகவு கூட இருந்தது )
திறந்தேன்
அழகாய் டைப்பண்ணி இருந்தான்.
“மன்னிச்சு கோ..மன்னிப்பு நான் சொன்னதுக்க்கு இல்லை …..நீ இவ்வளவு நாளா எப்பிடியும் பீல் பண்ணி இருப்ப உன் கவலைக்கும் கோவத்துக்கும் நான் காரணாமாயிட்டன் அதுக்கு தான் மன்னிப்பு கேட்டேன்..மற்ற படி நான் கேட்டது ஒன்றும் தவறில்லை…அது எனக்கு நான் கேட்ட நாளுக்கு 2 நாள் முதல் தான் தோணிச்சு……என் நட்பு நிஜம். எந்த கீழ்தனமான எண்ணத்துடனும் நான் பழக்வில்லை……அது உனக்கும் தெரிய்ம்……மனித உண்ர்வுகளுக்கு முன்னால சமூகம் ,வயசு எல்லாம் பெரிய விசயம் இல்லை . உலகத்துக்கு இது ஒண்ணும் புதிதல்ல . எனக்க்கு உன்னை அவ்வளவு பிடிக்கும். இது போதும் இதை நான காதல்கடிதமாக்க விரும்பவில்லை . ……உன்னை முழுதாய் புரிந்தன் நான் என்றும் என்னையும் நீ புரிந்து கொள்வாய் என்று நினைத்து இருந்தேன்……ஒரு வாரம் நீ கண்களுக்கு தட்ட்டு படுவாய் என்று காத்திருந்தேன் ..வரல …நான் போறேன்…….இனி உன்கண்களில் படேன்…….”
கடசியாக ஒன்று சொல்கிறேன்…..நான் தோத்து போனேன்.”
முடிந்திருந்தது கடிதம்.
விசைப்பலகையில் கைக்கள் படர பொத்தான் கள் கண்களின் ,கண்ணீர் பிசு பிசுத்த்து.
“பாவி நீ தோற்று தான் போனாய் என் மனம் செத்தே போய் விட்டது எப்படி சொல்ல போகிறேன்…இந்த கணம் முதல் நான் அந்த அசுர விதை என் மனதிலும் விதைக்கப்பட்டதை…..
இனி அதைசொல்லப்போவதும் இல்லை என்பதையும்.
-யதார்த்தன் -