வியாழன், 29 அக்டோபர், 2015

Posted by விகாரன் On 6:58 AM

மானும் மரை இனமும் மயிலினமுங் கலந்தெங்கும்
தாமே மிக மேய்ந்து தடஞ் சுனை நீர்களைப்பருகி
பூமாமரம் உரஞ்சி பொழி ஊடே சென்று –புக்குத்
தேமாம் பொழில் நிழல் துயில் சீபர்பதம்லையே.
-சுந்தரர்-
மேற்படி தேவாரம் சுந்தர மூர்த்தி நாயனார் சீபர்பத மலைச்சிவன் உறைகின்ற கோயிலின் சூழல் அழகை வர்ணிக்க பாடியதாகும்.
இப்படி ஒரு தலைப்பை (நான் பத்தியின் தலைப்பை- அப்பப்பா ஒரு மொழிக்கு எத்தனை மீனிங்குகள்) வைத்து விட்டு இவன் சம்பந்தமே இல்லாமல் சுந்தரர் தேவாரம் பாடுகிறானே என்று ஆச்சரியப்படுவதை இந்த செக்கனே நிறுத்தி கொள்ளலாம்.
இன்று மாலையில் பொழுது போகவில்லை . கமராவை எடுத்துக்கொண்டு ஊரின் எல்லையில் இருக்கும் தரவைப்பக்கம் சைக்கிளை மிதித்தேன். ஒரு இடத்தில் வீதியோரமாக ஒரு பாழடைந்த பழைய கேணி இருந்தது
, மூன்று நாள் பெய்த மழை கேணியை நிரம்பிவழியச்செய்திருந்தது ,அதன் அருகே ஒரு சில மாடுகள் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தன. கேணியின் ஒரு மூலையில் பற்றைகளுக்கு நடுவே மயோசின் சுண்ணக்கல்லை பொழிந்து மாட்டுயரத்திற்கு ஒரு ஆவுரஞ்சி கல் நின்றது. அந்த ஆவுரஞ்சி கல்லில் மாடுகள் தம் உடலைத்தேய்த்தன.
2011 மார்கழி மாதம் வரை யாழ்ப்பாணத்தின் அனைத்து பொதுக்கிணறு , பொதுத்தொட்டிகள் , கேணிகள் , குளங்களுக்கு அருகில் நன்று பொளியப்பட்ட கல் ஒன்று நிமிர்ந்திருப்பது ஏன் என்று நான் யோசித்ததே கிடையாது. அந்த கல்லைப்பற்றி தெரிய வந்தது 2011 மார்கழி மாசத்தில் தான் , அதற்கு காரணம் தான் மேலே வந்த சுந்தரர் தேவாரம்.
(ஒரு முறை மூச்சை விட்டு விட்டு தொடர்ந்து வாசிக்கலாம்)
அப்போது நான் க.பொ.த உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன். தமிழை ஒரு பாடமாக படித்துக்கொண்டிருந்தேன். மானிப்பாயிலுள்ள புகழ் டியூசனில் சத்தியவேந்தன் சேரிடம் தமிழ் படித்துக்கொண்டிருந்தேன். உயர்தர தமிழ்ப்பாட அலகில் சுந்தரரின் “திருப்பருப்பதம் அல்லது சீபர்ப்பதம் ” என்ற பதிகத்தொகுதி (பதிகம் – பத்து பாடல்கள் கொண்டிருக்கும்) சேர்க்கப்பட்டு இருந்தது.
அதில் முதலாவதாக வரும் இந்த பதிகத்தை சத்தியவேந்தன் சேர் விளங்கப்படுத்தினார்
மானும் மரை இனமும் மயிலினமுங் கலந்தெங்கும்
தாமே மிக மேய்ந்து தடஞ் சுனை நீர்களைப்பருகி
பூமாமரம் உரஞ்சி பொழி ஊடே சென்று –புக்குத்
தேமாம் பொழில் நிழல் துயில் சீபர்பதம்லையே.
பாடலின் பொருள் இதுதான்
மான்களும் , மயில் இனங்களும் ஒன்றாக கலந்து நின்று அப்பிரதேசம் எங்கும் உலாவி தாமாகவே மேய்ந்து , பின்னர் அங்குள்ள நீர் நிலைகளில் தம்தாகத்தை தீர்த்துக்கொண்டு வயிறு நிறையப்பெற்றவைகளாய் பூக்களை பொழிகின்ற பெரிய மரங்களில் தம் உடலை உரஞ்சிச் சென்று நிழலை பொழியும் சோலை மரங்களின் கீழ் படுத்துறங்கும் அழகை பெற்றது சீபர்பத மலையாகும்.
என்று பொருள் சொன்னார் சேர். நான்
“அதேன் சேர் சாப்பிட்டு முடிஞ்சதும் மரத்தில போய் தேய்க்குதுகள் ?”
“தம்பி யாழ்ப்பாணத்திலதானே இருக்கிறீங்கள் ?”
“ஓம் சேர்”
“யாழ்ப்பாணத்தில கிணறுகள் குளங்களுக்கு பக்கத்தில
ஒரு கல் நட்டிருக்கும் கண்டிருக்கிறியளோ ?”
“ஓம் சேர்”
“அதேன் அங்க நட்டிருக்கெண்டு தெரியுமோ ?”
“…….”
“என்னடாப்பா நீங்கள் , அதுக்கு பேர் ஆவுரஞ்சிக்கல்”
“அப்பிடியெண்ட்டா ”
முன்வாங்கில் இருந்த ஏதோ ஒரு அழகான பிள்ளை.
“ஆ எண்டா என்ன ?”
“பசு மாடு”
“வெரிகுட் இப்ப அர்த்தம் சொல்லுங்கோ”
”பசுமாடு தேய்க்கிற கல்லோ சேர் ?” என்றேன்
கிளாஸ்ல எவனோ ஒரு நண்பன்
“என்னத்தையடா ?”
வகுப்பே கொல் என்று சிரித்து அடங்கியது
“தம்பி மாடுகளுக்கு பசி தாகம் தீர்ந்தா பிறகு உடம்பில் ஒரு வித தினவு எடுக்கும் , அப்ப மரத்திலையோ இப்பிடி கல்லிலையோ தமது உடலை தேய்த்துக்கொள்ளும் அதுக்காக தான் அந்த கல்லை எங்கட பாட்டன் பூட்டன் எல்லாம் நட்டிட்டு போனவை”
“ஓ அந்த தேய்ப்பு தான் சுந்தரர்ட தேவாரத்தில வருகுதோ ?”
“அதே தேய்ப்பு தான் ”
வகுப்பு முடிந்ததும் சேர் எங்களுடன் இருளும் வரை பேசிக்கொண்டிருப்பார். அவரிடம் நாங்கள் மறுபடியும் ஆவுரஞ்சி கல்லைப்பற்றி கேட்டோம். அப்போது சேர்,
எல்லா மிருகமும் அப்பிடிதான் தம்பியள் , உணவு முடிந்ததும் உடல் தினவெடுக்கும் அதுக்கு பிறகு இனப்பெருக்கம் செய்ய முயலும் , இது இயற்கையான ஒன்றுதான். என்று சொன்னார். அப்போது அருகில் இருந்த நண்பன் ஒருத்தன் ,
(அனேகமாக ரதனாக இருக்கும்)
”அப்ப மனுசர் என்னமாதிரி சேர் ?”
“ஏண்டா மனிசனும் மிருகம் தானே ”
அன்றுடன் அந்த உரையாடல் மறந்து போனது.

ஆனால் இன்று மாலையில் அந்தகல்லை பார்த்தவுடன் ரதன் கேட்ட கேள்விதான் ஞாபகத்திற்கு வந்த்து .


மனிதனுக்கு அடிப்படை தேவைகள் , உறையுள் ,உணவு எல்லாம் கிடைத்த பிறகு மனிதன் அடுத்ததாக கையாள நினைப்பதே உடலாகத்தான் இருக்கும்.
முந்தநாள் வடமராட்சிக்கு கிரிஷாந் ,அனோஜன் ,குமாரதேவன் ஐய்யா வுடன் பஸ்சில் புறப்பட்டோம், சுதந்திரத்தை பற்றியும் , மனித தேவைகளைப்பற்றியும் கிரி அனோஜனிடமும் என்னிடமும் கேள்விகளை கேட்டு விவாதித்தபடி வந்தான்.
ஒரு சந்தர்ப்பத்தில் “மனிசண்ட வாழ்கை எண்டுறது அடிப்படையான வாழ்தலுக்கான தேவையும் செக்ஸ்சும் தாண்டா மிச்சம் எல்லாம் அதன் பொருட்டு கட்டமைக்கப்பட்ட , புனையப்பட்ட உண்மைகள் தான். மற்றபடி எல்லாமே For Fucking தான் “

என்று சொல்லியபடி வந்தான். அதுவும் நினைப்பில் வந்து சென்றது.
எங்கட ஊர்ல குருவிக்காடு என்று சொல்லும் ஒரு சிறுகண்டல் காடு இருக்கின்றது, கோடைகாலங்களில் ஊரில் ஒரு கலாசார பாதுகாவலர் குழு எப்போதும் ஊருக்குள் யார் வருகிறார்கள் , எந்த ஜோடி குருவிக்காட்டுக்குள் இறங்குகின்றது என்ற கண்காணிப்பில் இயங்கிக்கொண்டிருக்கும். குருவிக்காட்டுக்குள் ஐட்டம் அடிப்பவர்களை பிடிப்பதற்கு அந்த குழு எப்போதும் தயாராகவே இருக்கும். அவ்வாறு அவர்கள் பிடித்த புணர்தல் ஜோடிக்கள் ஏராளம் , அதனை ஏதோ பெரியசாதனையாக ஊர் முழுக்க கதைப்பார்கள்.
இத்தனைக்கும் அவர்கள் அத்தனை பேரின் செல்போன்களின் Browsing History இலும் அத்தனை ப்ரோனோ தளங்களின் வரலாறு கொட்டிக்கிடக்கும். இது அவர்களின் தவறில்லை , கலாசாரம் பண்பாடு என்ற பெயரில் மனிதத்தினவுகளை அடக்கி அடக்கி நமது சமூகம் பாலியல் என்பதனையோ சக பாலின உடல் என்பதையோ புரிந்து கொள்ளாத ஒன்றாகவே வளர்க்கப்பட்டிருக்கின்றது.


சக பாலுடலை கடத்தல் அல்லது புரிந்து கொள்ளல் என்பது 40 வயதுக்கு மேல்தான் நடக்கிறது , அல்லது அதுவும் இல்லை. ஒழுங்கான பாலியல் கல்வியும் பாலியல் சுதந்திரமும் வழங்கப்பட்ட சமூக அமைப்பை கட்டாதவரை , ஐந்து வயது குழந்தை மேலும் மனித உடல் தினவு ஏற்பட்டபடிதான் இருக்கும் , இது மாற்றமுடியாத இயற்கையாகும்.


ஏன் வெளிநாடுகளில் விபச்சாரத்தை அரசு அங்கீகரிக்கின்றது , ஏன் ஒரு ஆணும் பெண்ணும் விரும்பும் பட்சத்தில் தம் உடல்களை பரிமாறிக்கொள்ளல்லாம் என்பதற்கு அனுமதி இருக்கிறது என்று நாம் சிந்தப்பதேயில்லை. அதுவும் வெப்ப வலைய நாடுகளில் இருந்து கொண்டு நம் சமூகம் ஏற்படுத்தியிருக்கும் சிக்கலான பாலியல் நடத்தை கோலங்கள் வன்முறைக்கே கொண்டு சென்று நிறுத்தும்.
சக தோழியின் சட்டை விலகி உள்ளாடைப்பட்டி தெரிந்தால் கூட கண் ஒருமுறை அதனை தடவிப்பாக்கும் இயல்புமுறைக்கு பழக்கப்பட்ட ஆண்களாகவே நாம் ஒவ்வொருத்தரும் வளர்ந்து நிற்கின்றோம்.
அடிப்படை பாலியல் சுதந்திரமும் அடிப்படை பாலியல் கல்வியும் இருக்கும் பட்சத்தில் கற்பழிப்புக்களுக்கோ இதர பாலியல் வன்முறைகளுக்கோ இடமிருக்காது. மனிதஉடல்த்தினவு என்பது மனிதர்களுக்கு இயற்கையான ஒன்றாகும் , அது உணவு முறையைப்போல , சுவாசத்தை போல இயல்பானதும் சாதாரணமானதுமாகும்.
ஆனால் காதலிக்கும் பெண்ணை கூட குருவிக்காட்டுக்குள் கூட்டி வரவேண்டிய சமூக அமைப்பை நாம் தான் உருவாகி வைத்திருக்கின்றோம். பரஸ்பரம் எழும் பாலியல் தேவைகளை இயல்பாக்கவும் சுதந்திரமாகவும் மாற்றும் பட்சத்தில் , யாரோ இருவர் புணர்வதை செல்பேசியில் பார்த்து சுயமைதுனம் செய்யவும் , கற்பழிக்கவும் , உடலிச்சைக்காக கொலை செய்யவும் தயாராகும் மனித மிருகத்தை சாதுவாக நடக்கசெய்ய இயலும்.


ஆனால் பண்ணை கடல்கரையில் காலம் காலமாய் காதலித்துக்கொண்டிருக்கும் மனிதர்களை போட்டோ எடுத்து தலைப்புசெய்தியாய் போடும் யாழ்ப்பாண அச்சு மற்றும் இணைய ஊடகங்களும் , பண்பாடையோ பாலியலையோ எப்படி புரிந்துகொள்ளகூடாதோ அப்படி புரிந்து கொண்டிருக்கும் எங்கள் ஊர் குருவிக்காட்டு காவலர்களுக்கும் அறிவூட்டுவதும் அடிப்படையான பாலியல் கல்வி பாலியல் சுதந்திரம் என்பவற்றை தெளிவாக்குவதும் தான் சரியாக இருக்கும்.
மற்றபடி. இல்லை முடியவே முடியாது பெய்யென பெய்யும் மழை , இராமன் சீதை, கண்ணகி மதுரை எண்டு ஆரம்பிச்சியள் எண்ட்டா உங்களுக்கு கிரிஷாந் சொன்னதைதான் சொல்லலாம்.


புரிஞ்சுக்க ராசா எல்லாமே For Fucking தான்


(மூச்சை விடுங்கள்)
மற்றபடி நீ திறமோ ? நீ பிட்டு படம் பாக்கிறதானே என்பவர்களுக்கு,
”பத்தி எழுதினதே எனக்காக தான்.”

-யதார்த்தன் -

1 கருத்து:

  1. Splendid ...
    நீ எழுதும் வசனநடை ..கருப்பொருள் இரண்டும் மிகத்தேவையான தனித்துவம். ம்ம்
    பாவம்" ரதன்" .. keep up the goodness

    பதிலளிநீக்கு