ஞாயிறு, 13 டிசம்பர், 2015

Posted by விகாரன் On 7:08 AM

..................
மின்மினியால் செய்யப்பட மூக்குத்தி
சொன்னது,

நோயுற்ற பொழுதில்
மீண்டும் மீண்டும்
புதைந்தன வார்த்தைகள்

அழாதவைகள்
எப்போது கண்னீரானது
என் சகி

அழுததை
மீண்டும் உறிஞ்சிக்கொண்டனவுன்
கண்கள்.

இப்போது

துரத்தும் போது
எவ்வளவு தூரம் பறந்து
நான் திரும்பவேண்டும்?


நோய்முடிய
மீண்டும்
நம்மிடையே எப்போதும் போல
தேனீர்கோப்பைகளும்
வெள்ளை இறகுகளும் மிச்சமிருக்கும்
நமக்குத்தெரியும்

பாடல்களில்லாத
யுகமொன்றில்
நாட்டியங்கள் பிறந்ததுண்டோ

சமயத்தில் அகவும்
பூனைகளுக்கும்
தேவதைப்பாடல்கள் பரிச்சமுண்டு

ப்ரியம்
வார்த்தைகளின் என்பு

நல்லவேளை
கடைசியாய் அவை
வார்த்தையாக(மட்டும்)
முடிந்து போயின
தலைநீட்டி எழுந்து பற
பறவையே
கூடிழத்தலே ஞானம். *

-ய-
13.12.2015
7.25pm- 7.37pm

0 கருத்துகள்:

கருத்துரையிடுக