வெள்ளி, 24 ஜூலை, 2015

Posted by விகாரன் On 7:20 PM










01

உன்னுடைய பூனையை
எனக்கு தெரியாது

02.

அது இறந்து விட்டது

03

உன் பூனை எலிகள் பிடிப்பதுண்டா ?
இரண்டையும்
எனக்கு பிடிப்பதேயில்லை

04

நீ இரண்டு உலகங்கள் உண்டென்பாய்
சுவற்றிக்கு உள்ளேயுள்ளவுனது உலகில்
அதுவொரு முக்கிய பிரஜையாக இருந்திருக்க வேண்டும்.

05

சகி
தனிமையிலிருப்பதாய் கூறுமென்
அத்தனை தோழிகளும் பூனையொன்றை வளர்ப்பதாய்
ஏன் ?
சொல்கிறார்கள்.

06

இதிலிருந்து மீண்டவுடன் எனக்கொன்று சொல்ல வேண்டும்
ஏன் அதற்கு idiot
என்று பெயர் வைத்தாய் ?
07

இதற்காக
யாரை தண்டிக்க போகிறாய்
எதிர்வீட்டு நாயை ?
உன் அம்மாவை?
அல்லது உன்னை நீயே ?

08

நீ சிரிக்கத் தொடங்கியவுடன்
என்னை தவிர
யாரும் உனக்கொரு பூனையை பரிசளிக்கலாம்.

09

மூச்சும் விடமுடியா கொழும்பின்
கட்டட காட்டினுள் அதை
எங்கே புதைத்தாய் ?

10
ப்ரியசகி
ஒன்பதாவது கவிதைக்காக
என்னை சபித்திவிடு
ஒரு பூனையாகிவிடும்படி.

-யதார்த்தன் –(pratheep kunaradnam)
25.07.2015
4.06 am

0 கருத்துகள்:

கருத்துரையிடுக