செவ்வாய், 29 செப்டம்பர், 2015

Posted by விகாரன் On 6:34 AM

01.

நீயற்றிருந்த
இரவு

02.

யன்னலுக்கு வெளியே அழும் மழை

03.

யன்னல்
திறக்கும் போதெல்லாம்
இரவுக்குளிருந்து வேகமாய் வந்து
கம்பிகளில் மோதி இறக்கும் செம்பறவை

04.

நொண்டிக்காலில் நிற்கும் தீச்சுவாலை
பாளமாய் வெடித்த சிமிலி
பூஞ்சணம் பிடித்த ஒளி
மேலும் இத்யாதிகள் கொண்டவந்த லாந்தர்

05.

இரவின் மீதேறிவந்து
மணக்கும்
பூவில் தேய்க்கப்பட்ட சிகரட்டின்
நெடி

06.

விழித்த பின்னும்
முடியாத துர்கனவு.

07.
கடைசியாய் வெளிச்சம் வந்த போது
கதவுகளுக்கு பின் நிறுத்தி வைத்த
நிழலின் ஓலம்

08.
குளிர்காற்றில்
உறையும்
பாதி அருந்திய தேனீர் கோப்பை

09.
கடைசி சொட்டு
மின்சாரத்தில்
விக்கி இறக்கும்
கைபேசி

10
இறுக்கி கண்களை மூடுகையில்
மெல்ல எழும் உன் தூயமுகம் ,
கருவறை இருட்டு
மூக்குத்தி வெளிச்சம்.*

-யதார்த்தன் 
(29.09.2015 அதிகாலை 03 மணி)
* கடைசி அடி – கிரிஷாந்தின் கவிதையொன்றை அடியொற்றியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக