சனி, 16 ஜனவரி, 2016

Posted by விகாரன் On 6:50 PM
சபிக்கட்ட நிலத்தில்
பிரிவு மற்றும் பொய்
ஆகிய சொற்களின் இடையில்
என்னை நிறுத்திவிட்டு போனாய்
பிரிவு ஒரு ஓநாயாக மாறி
பொய்யை கவ்விச்சென்றது
பொய் பச்சை குருதியின்
வாடையுடன் இருந்ததை அது உணர்ந்திருக்க வேண்டும்
இது நடந்த பின்
கண்களை இழந்த வண்ணத்து பூச்சிகள்
துர்கனவாகி என்னை மொய்க்கின்றன
மனனம் செய்யபட்ட சொல் ஒன்றைப்போல் மனதெங்கும்
உலவுகின்றன
உன்னுடைய ஜெபங்களை
கனவுகள் மீது தூவி
வண்னத்திகளை பசியாற்றுகின்றேன்
அழகானவை மிகபசியாக இருக்கின்றன
சபிக்கப்பட்ட இந்நிலத்தில்
பொய்கள்
இரகசியத்தை அணிந்துகொண்டே திரியும்
எனினும் நான்
ஓநாய்களின்
பல்தடங்கள் ஆறும் மட்டும்
இங்கே தான் இருக்கவேண்டும்.
-ய-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக